எலிகளுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்

ருசிகண்ட பூனையின் வருகை குறித்து

இருட்டைக் கிழித்து ஒளிரும் கண்களில்

தேடலின் தீவிரம் வழிய

பதுங்கிப் பாய்ந்து

மதில்மீதேறி நிதானித்து நகரும்

கயிற்றின் மீது நடக்கும்

தேர்ந்த வித்தைக்காரியின் சாகசத்தை விஞ்சி

அசட்டையுடன் இரையின் மீதே

கவனம் நீளும்.

பூனையின் ஆளுமையை பதிவு செய்வதற்கான

ஆவலில் ஒரு வெள்ளைத்தாளில்

ஓவியமாக்கும் முயற்சியில்

தாளின் மையத்திலிருந்து

மதில்சுவர் வரையும் பொழுதில்

நீளும் கோட்டின் மீது

பூனையின் கர்வம் மிளிர

நகர்கிறது பேனாமுனை.

No comments:

Post a Comment