பிரிவு


மழைநீர் தேங்கிய குட்டையின்

சேற்றுப்படுகையிலிருந்து நீளும்

கருவேலங்குச்சியின் விளிம்பில்

தவமிருக்கும் தும்பியின்

தனிமைச் சோகத்தை தாளாது

கனத்து கருத்ததொரு அந்தியில்

நிகழ்கிறது நம் பிரிவு

எளிதில் எல்லாவற்றையும்

உதறிச் செல்கிறாய்

ஒரு குழந்தை

சென்றதற்கான

அத்தனை தடயங்களுடனும்

நிசப்தம் நிரம்பிய அறையாய்

கலைந்து கிடக்கிறேன்.